Tuesday 11 October 2011

கால்சட்டைக்கால குறிப்புகள்

கால்சட்டைக்கால குறிப்புகள்
இசாக்

1
டைமழை வெள்ளத்தில்
அடித்துக்கொண்டுவந்த
கப்பல்
கவிழ்ந்துக் கிடந்தது
எங்கள் வீட்டுவாசலில்
யார் விட்டதாக இருக்கும்?

2
ய்யனார்கோயில்
இளுப்பைத் தோப்பில்
மரம் ஏறி
பழம்பறிக்க உதவிய கல்குதிரை
பறித்துப்போட்ட கிளி
அஃரிணைகளாகவா இருக்கும்?

3
புதிதாக வாங்கிவந்த
சிப்பாய் பொம்மையின் முன்னிலையில்
காணாமல் போனது
என் பென்சிலும் அழிப்பானும்
சிப்பாய் என்றாலும்
பொம்மை பொம்மைதானே

4
ந்திரா காந்தி
சுடப்பட்டு இறந்த அன்று
குடும்பமே தெருவில் நின்று
கதறி அழுத்து
எங்கள்
வீடு
தீப்பற்றி எரிந்ததால்.

5
ண்டைக்காரன் வீட்டு கொள்ளையில்
கரும்பு உடைத்துத் தின்றதை
எப்படி மறுத்தாலும்
நம்ப மறுப்பார்
கிழிபட்ட உதடுகளைப் பார்த்த அப்பா

நன்றி: கல்கி, அக் 16

கால்சட்டைக்கால குறிப்புகள்

1
ள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்
சிவன்கோயிலினுள்
நானும் ரவியும்
பதுங்கிக்கொள்வோம்
உள்ளே சுற்றித்திறிந்து
தேடிப்பிடித்து மகிழ்வான் தாமஸ்


2
வெளியூரிலிருந்து
செங்கல்சூளைகளுக்கு
கல் அருக்க
வந்தவர்களுக்கு
வாய்த்ததெல்லாம்
வெய்யிலும்
மழையும்தான்


3
பெரிய ஏரியின்
மீன் பிடித்திருவிழாவில்
கால்சட்டைப் பைகளுக்குள் பதுங்கிய
மீன்களின் பெயர்களும்
நினைவில் இல்லை இன்று
எல்லாவற்றையும்
மீன்கள் என்றே
சொல்லிப்பழகிக்கொண்டேன்


4
ரி கோடிபோகும் நாளில்
கிடைக்கும்
பள்ளி விடுமுறைகளை
விழுங்கிக்கொண்டு
எழுந்து நின்றது
புதிய பாலம்


5
டிவிளையாடிய போது
கால்களை பழுதாக்கிய கருவேலமரங்களும்
துள்ளத்துள்ள ரசித்தாலும்
நெருங்கிய கையில் குருதி பார்த்த
கெளுத்திமீன்களும்
எதிரிகள் என்று
அப்போதெனக்கு தெரியாது

நன்றி : தாமரை அக்டோபர்